என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவ மாணவிகள் மனு"
மொடக்குறிச்சி:
எழுமாத்தூரில் பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் கொடுமுடி நடுப்பாளையம் அருகே உள்ள சாணாம்புதூரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 20) என்பவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாணவர்கள் 2 பிரிவாக பிரிந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக தினேஷ்குமார் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர். வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வந்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரோடு-முத்தூர் ரோட்டில் உள்ள எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
தினேஷ்குமார் மீது பொய்யான புகார் கூறி இடைநீக்கம் செய்துள்ளார்கள் என்றும் தினேஷ்குமார் சாவுக்கு காரணமான கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவ-மாணவிகள் கூறினர்.
அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என போலீசார் தெரிவித்தனர். இதனால் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்றும் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியை புறக்கணித்த அவர்கள் எழுமாத்தூரில் கூடினர். அவர்களை போலீசார் கலைந்து போகச்செய்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 வேன்கள் பிடித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டனர். கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அங்கு சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் தினேஷ் குமார் சாவுக்கு காரணமான முதல்வர் மற்றும் 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
தினேஷ்குமார் இறுதி சடங்குக்கு சென்ற 10 மாணவர்களை சஸ்பெண்டு செய்துள்ளனர். அந்த சஸ்பெண்டு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
எழுமாத்தூரில் இருந்து கல்லூரிக்கு 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டி யுள்ளது. இதனால் கல்லூ ரிக்கு செல்ல தாமதம் ஏற்படுகிறது. ஆனால் பேராசிரியர்கள் அவதூறாக பேசுகிறார்கள் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் எங்களது மாற்று சான்றிதழ்களை திரும்ப பெற்றுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்